Tuesday, March 15, 2011

வெளிநாட்டைக் கனவு காணாதவர்கள் ....

நானும் அப்படித்தான்...
39 வயது வரை பாஸ்போர்ட் எடுக்கவில்லை.
திடீரென்று பயணம்-
பத்து நாட்களில் பாஸ்போர்ட் எடுக்கவேண்டும்.
தட்கலில் அப்பளை செய்யலாம் என்றால் -
வேண்டாம் என்று எனது காவல்துறை நண்பர் சொன்னார்.
அவருடைய ஆலோசனையில் பத்தாவது நாள் விரைவாகப் பெற்றேன்.
பதினோராவது நாள் பயணம்.
அல்புராக் டிராவல்ஸ் உதவிசெயதனர்.
வெளிநாட்ட்டில் கால் வைத்தேன்.
அடுத்த பத்துநாட்களில் இந்தியா திரும்பினேன்.
மறுபடி கனடா விசா -
அதன்பின் சரியாக ஒருவருடத்தில்-
கனடா- இப்பொழுது பலநாடுகளுக்குப் பறந்து-
கனடாவின்  குடிமகனாக மாறும்பொழுது -
லேசாக நெஞ்சு வலித்தது.
இந்தியாவிற்கு மனுசெய்தேன் -
இரட்டைக் குடியுரிமை கோரி !
எதோ ஒரு பேப்பர் இல்லை என்று மறுத்து விட்டார்கள்.
நான் இப்பொழுது ஒரு அந்நியன்........

No comments:

Post a Comment