Sunday, March 27, 2011

ஹலோ- தொண்டர்களே!

ஹலோ- தொண்டர்களே!
நான் உங்கள் மனசாட்சி !!
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. ஐந்து தடவை, நான்கு தடவை பதவி வகித்தவர்கள் தான், மீண்டும் போட்டியிடுகின்றனர். மகிழ்ச்சி. தங்கபாலுவின் மனைவி போட்டியிடுகிறார். ஏன் கோபப்படுகிறீர்கள்? இதுதானே காங்கிரசின் வழக்கம். அதற்காக, உங்கள் கோபத்தை, தன்னிகரில்லாத் தலைவர் காமராஜர் வாங்கி, அவர் அன்புத் தலைவர் சத்தியமூர்த்தி பெயரில் கட்டி வைத்திருக்கிற கட்டடத்தைத் தாக்குவதிலா காட்டுவது? அது என்ன பண்பு...?

தங்கபாலு வைத்திருக்கிறாரே வீடுகள், தொலைக்காட்சி அலுவலகம்... அங்கே போய் ஆர்ப்பாட்டம் நடத்தினால் புரிந்துகொள்ள முடியும்! குலாம் நபி ஆசாத் டில்லியில் இருக்கும் வரை தங்கபாலுவை ஒன்றும் செய்துவிட முடியாது. தமிழே தெரியாத, தமிழகத்தில் எந்தத் தொகுதி, எங்கேயிருக்கிறது என்று தெரியாத அகமது படேல்களும், குலாம்களும் இருக்கிற வரை இது தான் நிலைமை.

தி.மு.க., கூட்டணி இல்லை என்றவுடன் வெடி போட்டுக் கொண்டாடினீர்களே... என்ன ஆயிற்று? குலாமும், தங்கபாலுவும் தான் வேலையை முடித்துவிட்டனரே. உங்களால் சோனியா அவமானப்பட்டது தான் மிச்சம். யாரைப் பதவியில் அமர்த்த? நேருவை, கர்நாடக இசைப் புலி, எம்.எஸ்.சுப்புலட்சுமியோடு, இணைத்து மேடைகளிலே அசிங்கமாகப் பேசிய, கருணாநிதியைப் பதவியில் அமர்த்த!

இந்திராவை, "கொடிய அரக்கி' என்று மேடைதோறும் பேசி மகிழ்ந்த கருணாநிதியை பதவியில் அமர்த்த! இந்திரா, வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டபோது, அதை "சாதாரணச் சாவு' என்று அசிங்கப்படுத்திய கருணாநிதியைப் பதவியில் அமர்த்த!


இந்திராவைக் கடுமையாக எதிர்ப்பவர்களா இருந்தும், வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் எல்லாம் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியபோது, அஞ்சலி செலுத்தாத, இந்திராவின் சாம்பல் வந்தபோது, அதற்குக் கூட அஞ்சலி செலுத்தாத, கருணாநிதியை பதவியில் அமர்த்த. பிரதமர் ஆவதற்காக, ராஜிவ் மீது பெரிய பழி சுமத்தி, பதவி போகப்போகிறது என தெரிந்ததற்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாக வேடம் போட்ட வி.பி.சிங்கைத் தமிழகத்துக்கு கூட்டி வந்து, ராஜிவிற்கு எதிராக அசிங்கம் அசிங்கமாகக் குற்றம் சுமத்திய கருணாநிதியைப் பதவியில் அமர்த்த!

வாசனுக்கு நினைவுபடுத்துகிறேன்... மூப்பனார் தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தைத் திறந்துவைத்த ராஜிவ், அன்று தமிழக மக்களுக்கு வைத்த வேண்டுகோள் என்ன என்று... பழைய பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இல்லையெனில், பத்திரிகைகளின் பழைய இதழ்களை எடுத்துப் பாருங்கள். "தி.மு.க.,வை வேரோடு, வேரடி மண்ணோடு பிடுங்கி எறியவேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்' இதுதான் தமிழகக் காங்கிரசாரிடம், ராஜிவ் வைத்த கடைசி வேண்டுகோள். ராஜிவ் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி, சென்னை கத்திப்பாரா சந்திப்பில், எம்.ஜி.ஆர்., தலைமையில், நேரு சிலையைத் திறந்து வைத்தது.

அந்தச் சந்திப்பில், காங்கிரசின் மீதும், நேரு, இந்திரா, ராஜிவ் மீதும், காமராஜர் மீதும் உண்மையான பற்று வைத்திருந்தவர், எம்.ஜி.ஆர்., என்பதால் தான் நேரு சிலை வந்தது. கருணாநிதி என்றால் நேரு சிலை வந்திருக்குமா? அதை, அவரின் பேரனை வைத்தே திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர்.,

அங்கே எம்.ஜி.ஆர்., சொன்ன வரி ஒன்றே தான், "என் உயிர் காத்த தலைவனே! நான் உன் தாத்தா நேருவின் தொண்டன். இந்திராவின் அன்புத் தோழன்; உனது உற்ற நண்பன். உனக்கும், உனது குடும்பத்திற்கும், உனது காங்கிரஸ் இயக்கத்திற்கும், நானும், எனது ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களும் என்றும் நன்றியாக இருப்போம்' என்றார். அந்த ராஜிவின் சாம்பல் சென்னை வந்ததே. அதற்கு அஞ்சலி செய்யப்போனாரா கருணாநிதி? இன்று, "எம்.ஜி.ஆர்., எனது நண்பர். என்னை முதல்வராக்கியவர்' என்கிறாரே. அன்று தமிழகத்தின் ஏழை, எளிய மக்களெல்லாம் எம்.ஜி.ஆரைக் காப்பாற்ற கோவில் கோவிலாக சென்றார்களே அவர்களின் வேண்டுதலாலும், ராஜிவின் சீரிய கவனிப்பாலும் தமிழகம் வந்தாரே எம்.ஜி.ஆர்., தேர்தலில் தோற்றதும், அந்தக் கொடிய நோயை, சாவு நோவு என்று கேலி செய்தவர் தானே கருணாநிதி.

 ராஜிவ் வேண்டுகோளை நீங்கள் மறந்தீர்கள்; எம்.ஜி.ஆரின் உத்தரவாதத்தை, அ.தி.மு.க., மறந்தது. தமிழகம் துடியாய்த் துடிக்கிறது!
          நெல்லைக் கண்ணன் - நன்றி-தினமலர்

Thursday, March 24, 2011

விக்கலுக்குச் சிகிச்சை

விக்கலுக்குச்  சிகிச்சை

குளிர்த்தாதி கியாழம்
:- கொள்ளு, சுக்கு, கண்டங்கத்திரி,
ஆடாதோடை இவைகளை கியாழம் வைத்து அதில் ஆமணக்கு வேர்சூரணத்தைப் போட்டு சாப்பிட்டால், விக்கல், மேல்மூச்சி இவைகள் நீங்கும்.

அபயாதி கல்கம் :- கடுக்காய், சுக்கு இவைகளை கல்கஞ் செய்தாவது அல்லது புஷ்க்கரமூலம் யவநானல், மிளகு இவைகளை கல்கஞ் செய்தாவது வெந்நீரில் சாப்பிட்டால், விக்கல், சுவாசம் இவைகள் நீங்கும்.

சந்திரசூர கியாழம் :- கோரைக்கிழங்கு விரை 1-பாகம்,
8-பாகம் ஜலத்தில் கொட்டி விரைகள் மிருது ஆகிறவரையிலும் கக்ஷ¡யங் காய்ச்சி வடிகட்டி, ஒருபலம் விகிதம் அடிக்கடி குடித்து வந்தால் விக்கல் நீங்கும்.

குளித்தாதி கியாழம் (வேறு) :
- கொள்ளு, யவதானியம்,
இலந்தை, வெட்டிவேர், தசமூலங்கள், சிற்றாமுட்டி இவைகளை கியாழம் வைத்து சாப்பிட்டால் காசங்கள், சுவாசங்கள், விக்கல் இவைகள் நீங்கும்.

தாத்தியாதி கியாழம் :- நெல்லிக்காய் தோல், திப்பிலி,
சுக்கு இவைகளின் கியாழத்தில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால், விக்கல் நீங்கும்.

தசமூலி கியாழம் :- தசமூல கியாழத்தில் தேன், காந்தபஸ்பம் இவைகளை கலந்து சாப்பிட்டால் ஐந்துவித விக்கல்கள் நீங்கும்.

சங்கதூள ரசம் :- பாதரசம், அப்பிரக பற்பம், சுவர்ண பற்
பம், இவைகள் சமஎடை இவைகளுக்கு சமஎடை வைக்கிறாந்த பற்பம் இவைகளுக்கு ஐந்து பாகங்கள் அதிகமாய் சங்கு பற்பத்தைக்கலந்து அரைத்து 4-குன்றி எடை தேனுடன் சாப்பிட்டால் ஐந்து வித விக்கல்கள் நீங்கும்.

மேகடம்பர இரசம் :- சுத்திசெய்த பாதரசம், சுத்திசெய்த
கெந்தி, சமஎடை இவைகளை சிறுகீரை வேர் ரசத்தினால் அரைத்து உருண்டை செய்து வஜ்ரமூசையில் வைத்து மணல் மறைவில் புடமிட்டு ஆறியபிறகு எடுத்து மறுபடியும், அதை தசமூல கியாழத்தால் இரண்டு ஜாமம் அரைத்து குன்றிஎடை அனுபானத்துடன் கொடுத்தால் விக்கல், சுவாசம், சுரம் இவைகள் நீங்கும்.

ஹரித்திராதி லேகியம் :- மஞ்சள், மிளகு, திரா¨க்ஷ, வெல் லம், சித்தரத்தை, திப்பிலி, கிச்சிலிக்கிழங்கு இவைகளைச் சூரணித்து எண்ணெயுடன் கலந்து சாப்பிட்டால் பிராணஹரமாகிய விக்கல், சுவாசங்கள் நிவர்த்தியாகும்.

சிகி லேகியம் :- மயிலிறகு சுட்ட சாம்பல், திப்பிலிசூரணம், இவைகளை தேனில் கலந்து, அடிக்கடி சாப்பிட்டால் பிரபலமான விக்கல், சுவாசங்கள், வாந்திகள் நீங்கும்.

பிப்பல்யாதி லேகியம் :- திப்பிலிமூலம், அதிமதுரம், வெல்லம், கோமயம், குதிரை லத்தி இவைகளை கியாழம் வைத்து வடிகட்டி தேன், நெய் கலந்து சாப்பிட்டால் விக்கல், காசம் இவைகள் நீங்கும்.

கோலமஜ்ஜாதி லேகியம் :- இலந்தைபழம் கொட்டை நீக்கியது, சுருமாகல், பொறிமாவு, கடுகுரோகணி, நாககேசரம், காவிக்கல், இவைகளை சூரணித்து தேனுடனாவதி அல்லது திப்பிலி, நெல்
லிக்காய் தோல், சர்க்கரை, சுக்கு, அன்னபேதி, தயிர் இவைகளை சூரணித்து தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நீங்கும்.

யஷ்டியாதி சூரணம் :- அதிமதுர சூரணத்தை தேனுடன்
கலந்து சாப்பிட்டாலும் அல்லது திப்பிலி சூரணத்தை சர்க்கரை கலந்து சாப்பிட்டாலும் அல்லது கொஞ்சம் சூடாயிருக்கும் பால், நெய் கரும்பு ரசம் இவைகளை கலந்து சாப்பிட்டாலும் ஐந்துவித விக்கல்கள் நீங்கும்.

விசுவா சூரணம் :- சுக்கு, கடுக்காய், திப்பிலி இவைகளின்
சூரணத்தில் சர்க்கரை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்லது சிந்தில்கொடி சுக்கு இவைகளை சூரணித்து நசியஞ்செய்தாலும் விக்கல்ரோகம் நிவர்த்தியாகும்.

கிருஷ்ணா சூரணம் :- திப்பிலி, நெல்லிக்காய் தோல், சுக்கு இவைகளைச் சூரணித்து சர்க்கரை தேன் கலந்து அடிக்கடி சாப்பிட்டால் விக்கல் பெருமூச்சு இவைகள் நிவர்த்தியாகும்.

சுருங்கியாதி சூரணம் :- கடுக்காய்ப்பூ, சுக்கு, திப்பிலி, மிளகு கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், கண்டங்கத்திரி, கண்டு பாரங்கி, புஷ்க்கரமூலம், ஜடாமாஞ்சி, இந்துப்பு இவைகளைச் சூரணித்து வெந்நீரில் கொடுத்தால் விக்கல், மேல்மூச்சு, ஊர்த்துவவாதம், காசம், அருசி, பீனசம், இவைகள் நிவர்த்தியாகும்.

பாரங்கியாதி சூரணம் :- கண்டுபாரங்கி, சுக்கு இவைகளைச் சூரணித்து வெந்நீரில் கொடுத்தாலும் அல்லது சர்க்கரையுடன் கொடுத்தாலும் விக்கல், மேல்மூச்சு இவைகள் நீங்கும்.

தசமூலாதியவாகு :- தசமூலங்கள், கிச்சிலிக்கிழங்கு, சிற்ற
ரத்தை, சுக்கு, திப்பிலி, புஷ்க்கரமூலம், கடுக்காய்ப்பூ, கீழாநெல்லி, கண்டுபாரங்கி, சீந்திகொடி, கோரைக்கிழங்கு இவைகளின் சூரணத்தில் தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்லது இவைகளை கியாழம் போட்டு சாப்பிட்டாலும் மேல்மூச்சு, ஹிருதயரோகம், பாரிசசூலை
விக்கல் இவைகளை நிவர்த்திக்கச் செய்யும்.

பெருங்காயம், சவ்வர்ச்சலவணம். சீரகம், பிடாலவணம், புஷ்க் கரமூலம், சித்திரமூலம், கடுக்காய்பூ இவைகலை கியாழமிட்டுக் குடித்தாலும் விக்கல், சுவாசரோகம் இவைகள் நீங்கும்.

சாகதுக்த யோகம் :- ஆட்டுப்பாலில் சுக்கு சூரணத்தைப்
போட்டு பக்குவஞ்செய்து சாப்பிட்டாலும் கொன்னைப்புளி சுரசத்தில் பொரிமாவு, இந்துப்பை கலந்து சாப்பிட்டாலும் விக்கல் நிவர்த்தியாகும்.

கொடிமாதுளம்பழ ரசத்தில் தேன், சவ்வர்ச்சலவணம் கலந்து சாப்பிட்டாலும் அல்லது சுக்கு, நெல்லிக்காய்த்தோல், திப்பிலி இவைகளின் சூரணத்தில் தேன் கலந்து சாப்பிட்டாலும் விக்கல் நிவர்த்தியாகும்.

ரக்தசந்தன யோகம் :- ரக்தசந்தனத்தை முலைப்பாலில் கலந்த கொஞ்சம் அனல் காண்பித்து இந்துப்பை கலந்து சாப்பிட்டாலும் அல்லது இந்துப்பை சலத்தில் அரைத்து நசியஞ் செய்தாலும் விக்கல் நீங்கும்.

விலாம்பழரசத்திலாகிலும் அல்லது நெல்லிக்காய் ரசத்தி
லாவது திப்பிலி சூரணத்தை தேன்கலந்து சாப்பிட்டாலும் விக்கல், மேல்மூச்சி இவைகள் நீங்கும்.

மதுக நசியம் :- அதிமதுரம், தேன் அல்லது திப்பிலி,
சர்க்கரை அல்லது சுக்கு, வெல்லம் இவைகளை பிரத்தியேகமாய் நசியஞ் செய்தால் விக்கல் நீங்கும்.

மாக்ஷ¢கா நசியம் :- ஈ மலத்தை முலைப்பாலில் கலந்து நசியஞ் செய்தாலும் அல்லது அரக்கு ஜலத்தில் அரைத்து நசியஞ் செய்தாலும் அல்லது முலைப்பாலில் சந்தனத்தைக் கலந்து நசியஞ் செய்தாலும் விக்கல் நீங்கும்.

ஹிங்குவாதி தூபம் :- பெருங்காயம், உளுந்து இவைகளைச்சூரணித்து புகையில்லாத நெருப்பில் போட்டு அந்த புகையைகுடித்தால் ஐந்துவித விக்கல்கள் நிற்கும்.

ஹேம மாத்திரைகள் :- சுவர்ணபற்பம், முத்துபற்பம், தாம்
பிர பற்பம், காந்தபற்பம் இவைகளை யொன்றாகக் கலந்து 2-குன்றி எடை கொடிமாதுளம்பழ ரசத்தில் தேன், சவ்வர்ச்சலவணம் கலந்து சாப்பிட்டால் விக்கல் நீங்கும்.

பிப்பல்யாதி லோஹம் :- திப்பிலி, நெல்லிக்காய்தோல், திரா¨க்ஷ, இலந்தைக் கொட்டையின் பருப்பு, சர்க்கரை, வாய்விளங்கம், கோஷ்டம், இவைகளைச் சூரணித்து இந்த சூரணத்தில் காந்தச் செந்தூரம் கூட்டித்தேன் கலந்து சாப்பிட்டால் அசாத்தியமான வாந்தி, விக்கல், தாகம், இவைகள் மூன்று நாட்களில் நிவர்த்தியாகும்.

விக்கல்களில் பத்தியங்கள் :- கிச்சிலிக்கிழங்கு, புஷ்க்கரமூலம், திரிகடுகு, கொடிமாதுளம்பழம் 60-நாட்களில் பயிராகும் நெல், பழைய அரிசி, கோதுமை, யவதானியம், பச்சைபயறு, கொள்ளு, தூக்கம் இவைகள் விக்கல், இருமல், பெருமூச்சு, தாகம் இந்த
ரோகங்களில் பத்தியமானவை.

விக்கலுக்கு அபத்தியங்கள் :- மலத்தைபந்திக்கும் திரவியங்கள் கள்ளு, மிளகு முதலிய விதாஹகரதிரவியங்கள், ரூக்ஷகரமான திரவி
யங்கள், கபகரதிரவியங்கள், மொச்சை, உளுந்து, புண்ணாக்கு, சலத்தில் உண்டாகும் திரவியங்கள், ஊற்றுபூமியில் உண்டான ஜந்திக்களின் மாமிசங்கள், பக்குவம் செய்யப்பட்ட திரவியங்கள், குச்சியினால் பல்துலக்கல், வஸ்திகருமம், மீன்கள், கடுகு, புளிப்பு, காய்கள், கிழங்குகள், எண்ணெயில் வறுக்கப்பட்ட பண்டங்கள், சீதளகர மான அன்னபானங்கள் இவைகளை விக்கல் உடையவர்கள் நிவர்த் திக்க வேண்டியது.

மேலும் விபரம் அறிய :
Dr.J

Wednesday, March 23, 2011

கொஞ்சம் கேளுங்களேன்

அய்யா மனசுக்கு இதமா
இந்தப் பாட்டக் கொஞ்சம் கேளுங்களேன்.
மூன்று நிமிஷங்கள்தான்.

Friday, March 18, 2011

தேர்தல் முடிவுகள் -2011

கனவு கண்டேன் தோழி!

அதிகாலையில் ஒரு கனவு கண்டேன்.
144 -தொகுதிகளில் அண்ணா தி.மு.க. தனிப்
பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்.
ஆனால், தோழியின் தலையீடு இருக்கத்தான் செய்யும்.

தமிழகம் விடுதலை ஆவதைவிட -
ஜெயலலிதா, மாந்த்ரீகம், வசியம் இவைகளில் இருந்து
விடுபடவேண்டும்.

கனவு கண்டவர் இவர்தான்.

Thursday, March 17, 2011

அமேரிக்கா போகணும்னு......


ரொம்ப நாளா அமேரிக்கா போகணும்னு ஆசை.
தமிழக அரசியல் கூத்துக்களை இந்த குளிரில் பார்க்க சகிக்கவில்லை.
என் மனைவியிடம் சொன்னேன்- வெள்ளிக்கிழமை புறப்பட்டுப்
போய்விட்டு செவ்வாய்க் கிழமை திரும்பி வந்துவிடலாம் என்று.
உடனே சரி என்றாள்.எண்கள் தேவாலய நண்பர் ஒருவரைக் கேட்டோம் அவரும் சரி என்று புறப்பட்டார்.சின்சினாட்டில் உள்ள அவரது
சகோதரியை பார்க்க அவருக்கும் சந்தோஷம்தானே.
வெள்ளிக் கிழமை இரவு எண்கள் செவர்லெட் இம்பாலா கார் வின்சர் எல்லையை நோக்கி விரைந்தது.இடையில் ஒரு சின்ன காபி ப்ரேக்.
சுமார் பனிரெண்டு மணி அளவில் எல்லையை அடைந்தோம்.
ஒரு நதி அமெரிக்காவையும் கனடாவையும் பிரிக்கின்றது.
இந்தப் பக்கம் வின்சர்- அந்தப்பக்கம் டெட்ராய்ட் இரண்டுமே கார்
உற்பத்திக்குப் பேர் போனவை.
எங்களது பாஸ்போர்ட்களை காரில் இருந்தவாறே கொடுத்தோம்.
எட்டிக் கூட பார்க்கவில்லை. சில சம்பிரதாயக் கேள்விகளைக் கேட்டுவிட்டு அனுப்பிவிட்டான் அந்த அதிகாரி.
டெட்ராய்ட் (மோட்டார் நகரம்)

ஒரு இரண்டு மணி நேரம் பயணித்தவுடன் சாலை ஓரம் ஒதுங்கினோம்.
அமெரிக்க சாலைகளில் ஆங்காங்கே லாரிகள் ஓய்வெடுக்க வசதி செய்து கொடுத்திருப்பார்கள்.
நாங்கள் ஒருமணி நேரம் காரில் இருந்தவாறே தூங்கிவிட்டு-
பயணத்தை தொடர்ந்தோம்.காலை ஐந்து மணி அளவில் சின்சினாட்டி நகரில் சற்று உயரமான ஒரு பகுதியில் அமைந்திருந்த ஒரு பழமையான ஆனால் பெரிய வீட்டின் முன் எண்கள் கார் நின்றது.
உடனே வீட்டின் முன் விளக்குகள் எரிந்தது.
என்ன ஆச்சர்யம் - அந்த பெண்மணியும் அவரது மகனும்
எதிர்பார்த்து காத்து இருந்தார்கள்.
உள்ளே நுழைந்து எங்களுக்கு ஆயத்தப் படுத்தி இருந்த அறைக்குள்
நுழைந்து சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு ஹாலுக்குள் வந்தோம்.
டீ பரிமாறப் பட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் எழுந்து வந்த மற்ற பிள்ளைகளுடன் எனது பொழுது போக்கு துவங்கிற்று.

மாலையில் ஷாப்பிங். அழகான கென்உட் மாலுக்குள் நுழைந்து
நான் புதுமையான தேநீர் (சுமார் 2880  ரூபாய்) வாங்கினேன்.
எனது மனைவி ஆலிவ் பாடிலோசன் வாங்கினாள்.
இரவு சாப்பாடு ஒரு பஞ்சாபி ரெஸ்டாரன்ட்.
பின்னர் எட்டு மணிநேரம் ஆழ்ந்த தூக்கம்- நீண்ட நாழைக்குப் பின்.

காலையில் கிராஸ் ரோடு சர்ச் - என்ன பிரமாண்டம். எவ்வளவு வித்தியாசம்.! ஆங்காங்கே காபி பார் வைத்திருந்தார்கள்( இலவசம்)
காபியும் ஒரு பேனாவும் , சில நோட்டுக்களும் எடுத்துக் கொண்டு
சிலர் உள்ளே சென்றனர்.எனது மனைவி நம்ம ஊரில் சர்ச் செல்வது போல் நல்ல பிள்ளையாக சென்றால். என்னை வேறு கடிந்துகொண்டாள்.
கையில் காபி கப் வைத்திருந்ததற்கு.

உள்ளே நுழைந்தவுடன்தான் தெரிந்தது- அங்கே பெரும்பாலும் எல்லோரும் காபி வைத்திருந்தனர்.அதை வைப்பதற்கு வசதியும் செய்து கொடுத்திருந்தார்கள்.காபியை ருசித்துக் கொண்டே உள்ளே நடப்பவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.எல்லோரும் சாதாரண உடை அணிந்திருந்தார்கள். அந்த சபையின் போதகர் ஒரு ஜீன்ஸ் பான்ட் & டீ ஷர்ட் போட்டிருந்தார். நான் மட்டும்தான் சூட்.

ஒரு விஞ்ஞானி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். கடவுளை விஞ்ஞானத்தின் மூலமாக அவருடைய பார்வை எல்லோரையும்
கைத்தட்ட வைத்தது. அடுத்து கேட்கப்பட்ட நாத்திக கேள்விகளுக்கு அவர் பதில் அளித்த விதம் மிக அருமை.

வெளியே வந்து இன்னுமொரு காபி- இலவசமாக -சுவையாக.
பிள்ளைகளை அவரவர் அறைகளில் இருந்து அழைத்துக் கொண்டு
GAP  outlet  சென்று ஒரு ஷாப்பிங். அங்கிருந்து கெண்டகி பயணம்.
சின்சினாட்டி ஒரு அழகான நகரம். ஆறு, மலை, பள்ளத்தாக்கு- எங்கும் செல்லும் சாலைகள்- சுத்தம், மக்களின் புன்னகை...இவை எல்லாம்
எங்களைக் கவர்ந்த விஷயங்கள்.

அமெரிக்க மாகாணத் தலைநகர்களில் ஒரு கிராமத்தைப் போல் தோற்றம் அழிப்பது கெண்டகி. மிகச் சிறிய ஊர். ஆனால் பெரிய வீடுகள்.
சரத், சௌமியா தம்பதிகள்- கர்நாடகாவை சேர்ந்த எங்கள் நண்பர்கள்.
அவர்களை சந்திக்க சின்சினாட்டியில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேர பயணம். உஷாதான் கார் ஓட்டினாள்- நாங்கள் சௌமியாவின் வீட்டை அடைந்தவுடன் சாப்பாடுதான்.
கெண்டகி (குதிரைகளுக்கு பெயர் போனது)
வகை வகையாக சமைத்து வைத்திருந்தாள். சௌமியா ஒரு வக்கீல்- ஆனால் சமையலில் மிக ஆர்வம். அவள் டொராண்டோவில் இருந்தபோது
தினமும் எங்களுக்கு விருந்துதான்.

மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு- நான் ஒரு தேநீர் தயாரித்தேன். எல்லோரும் பருகிவிட்டு திரும்பவும் சின்சினாட்டி பயணம். இரவு நிரம்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். உஷாவின் கணவர் ஒரு வெள்ளைக்காரர்- அவர் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். உற்சாகத்தில் குக்கி (இனிப்பு) தாரிக்க ஆரம்பித்து விட்டார். ஒரு அழகான தூக்கத்திற்குப் பின் அதிகாலையில் புறப்பட்டோம் கனடா நோக்கி.

இனி, விரைவில் அடுத்த பயணம் அமெரிக்காவிற்குத்தான்.

Tuesday, March 15, 2011

சின்சினாட்டி

எனது சின்சினாட்டி பயணம்.
ரொம்ப நாளா அமேரிக்கா செல்ல ஆசை.
அந்த சுவராசியமான அனுபவம் நாளை.
சின்சினாட்டி

வெளிநாட்டைக் கனவு காணாதவர்கள் ....

நானும் அப்படித்தான்...
39 வயது வரை பாஸ்போர்ட் எடுக்கவில்லை.
திடீரென்று பயணம்-
பத்து நாட்களில் பாஸ்போர்ட் எடுக்கவேண்டும்.
தட்கலில் அப்பளை செய்யலாம் என்றால் -
வேண்டாம் என்று எனது காவல்துறை நண்பர் சொன்னார்.
அவருடைய ஆலோசனையில் பத்தாவது நாள் விரைவாகப் பெற்றேன்.
பதினோராவது நாள் பயணம்.
அல்புராக் டிராவல்ஸ் உதவிசெயதனர்.
வெளிநாட்ட்டில் கால் வைத்தேன்.
அடுத்த பத்துநாட்களில் இந்தியா திரும்பினேன்.
மறுபடி கனடா விசா -
அதன்பின் சரியாக ஒருவருடத்தில்-
கனடா- இப்பொழுது பலநாடுகளுக்குப் பறந்து-
கனடாவின்  குடிமகனாக மாறும்பொழுது -
லேசாக நெஞ்சு வலித்தது.
இந்தியாவிற்கு மனுசெய்தேன் -
இரட்டைக் குடியுரிமை கோரி !
எதோ ஒரு பேப்பர் இல்லை என்று மறுத்து விட்டார்கள்.
நான் இப்பொழுது ஒரு அந்நியன்........

அதிவேக விவாகரத்து.

quick Divorce
 
$300
contact: 416-967-2657
 
இப்படிப்  பட்ட விளம்பரங்களைப் பார்த்தவுடன் 
நான் முதலில் அதிர்ந்துதான் போனேன்.
ஆனால் அதற்காக எல்லோரும் அப்படியில்லை என்று 
பின்னர்தான் அறிந்து கொண்டேன்.
என்பது வர்டுங்கள் சேர்ந்து வாழும் வெள்ளை இனத்தவர்களும் 
இருக்கின்றார்கள்.அடிக்கடி விவாகரத்து செய்துகொண்ட இந்திய,ஆசிய 
இனத்தவர்களும் இருக்கின்றார்கள்.
விவாகரத்துக்கு இங்கு செக்ஸ் ஒரு காரம் அல்ல.
தலைக்கனம், பொருளாதாரம்,குறட்டை,
ஆளுமை,புரிந்துகொள்ளாமை என்று பல காரணங்கள் உள்ளன.
எல்லாவற்றையும் விட வக்கீல் தொழில்தான் காரணம். 

இதப் படிங்க முதல்ல.

தமிழ் கலாச்சாரங்களை தூக்கி சாப்பிட்டு விடுகிற மாதிரி ஒரு கட்டுக்கோப்பான கலாச்சாரத்தோடு,  ஆமீஷ் ( Amish)  என்ற ஒரு பிரிவினர் (sect)  வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்களே இங்கே - இதே அமெரிக்காவில் இருக்கும் போது - நாங்கள்,   நம்மூரு கலாச்சாரத்தைப் பின் பற்ற தடை என்ன?  சொல்லுங்க...



அவர்களை பற்றி நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டியிருப்பதால், காமெடி கீமெடி பண்ணாமல்,  செய்திகளை  மட்டும் இந்த பதிவில்,  தொகுத்து தந்து இருக்கிறேன். 

Amish Mennonites என்ற ஒரு குழுவினர், கிறிஸ்தவ மார்க்கத்தின் ஒரு சபையை (denomination) சார்ந்தவர்கள்.  எளிமையான வாழ்க்கை முறை -  உடலை முழுவதும் மறைக்கும் எளிய ஆடை -   எந்த வித நவநாகரீக தொழில்நுட்ப முறைகளையும் ஏற்று கொள்ளாது,  இன்றும் இயற்கையோடு ஒத்து வாழ்பவர்கள். 

 1693 ஆம் ஆண்டு,  Switzerland ல்  Jakob Ammann என்பவரால் தான் இந்த ஆலய சபை முறை ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.   ஆமானை பின்பற்றியவர்கள்,  ஆமிஷ் என்றழைக்கப்பட்டார்கள். அதுவே இன்று வரை தொடர்கிறது. 

18 நூற்றாண்டில், இதில் பலர், அமெரிக்காவில் பென்சில்வேனியா  ( Pennsylvania ) என்ற மாநிலத்திற்கு வந்து குடியேறி இருக்கிறார்கள்.  அன்றைய வாழ்க்கை முறையையே இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பின்பற்றி வருகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறதா?   அமெரிக்காவின் சாயல் இவர்களை பாதிக்கவில்லை. 
2010 இல் எடுக்கப்பட்ட கணக்குப் படி,  கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளில் மட்டும் சுமார் 2, 50, 000 ஆமிஷ் மக்கள் இன்னும் அந்த வாழ்க்கை முறைப்படி வாழ்வதாக சொல்கிறார்கள்.  

தங்கள்  பிரிவைச் சார்ந்தவர்களைத் தவிர, இவர்கள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை. இவர்கள் எல்லோரும், அந்த அந்த மாநிலத்தில் ஒரே colony யாக சேர்ந்து வாழ்கிறார்கள்.  ஒரு காலனி என்பது - 20 - 40 குடும்பங்கள் கொண்டதாக இருக்கும்.   அடுத்த வீடுகளில் வசித்தாலும், கூட்டு குடும்பத்து முறைப்படி மாதிரிதான், ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கிறார்கள். 


தங்களுக்கு வேண்டிய பெரும்பாலான உணவு தேவைகளை அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். கோழி வளர்ப்பு, பால் உற்பத்தி,  காய்கறி பயிர் உற்பத்தி எல்லாம் அவர்களின் கைவேலைகளே. 



இவர்கள் தச்சு வேலை செய்வதில் வல்லுனர்கள். தங்கள் வீடுகளை,  அவர்கள் குழுவினரின் உதவியுடன் தாங்களே கட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் தச்சு வேலைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட மர மேஜைகள்,  நாற்காலிகள் போன்ற பொருட்களை தங்கள் காலனி பக்கமே கடையாக போட்டு விற்கவும் செய்வார்கள்.  பெண்களும் தையல் குறிப்பாக quilting என்ற கலையில் தேர்ந்த பயிற்சி பெற்றவர்கள்.


இப்படி தனித்து வாழ்வதால்,  இவர்களுக்கு மற்ற கலாச்சாரத்தைக் கண்டு எந்த வித தூண்டுதலும் (temptation) இருக்காது போல.  இவர்கள் வாழ்க்கை முறைக்கு, இவர்கள் நகரங்களில் இல்லாமல் சின்ன சின்ன கிராமங்களில் தான் தங்கி இருக்கிறார்கள்.

அவர்களது  மத விதிகள், அவர்களது ஆன்மீக வாழ்க்கைக்கு மட்டும் கட்டுப்படுத்தாது - அவர்களது அன்றாட வாழ்க்கை முறைக்கும் சட்ட திட்டங்களை வகுத்து உள்ளது.  

அவற்றில், முக்கிய பத்து விதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்: 

1.  அவர்கள் உடைகள் கவர்ச்சியான  நிறத்தில் - முறையில் - இல்லாமல், ( பொதுவாக கருப்பு நிறம், நீல நிறம்)  எளிய முறையில் தைத்து இருக்கப்பட வேண்டும்.  

ஆமீஷ் இளம்பெண்கள்: 




2 . எந்த காரணம் கொண்டும்  மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது.  அதனால், எந்த வித நவீன சாதனங்களும் உபயோகிக்க கூடாது.  தொலைகாட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கூட இவர்கள் பயன்படுத்துவது இல்லை. 

அவர்களின் சமையல் அறை:  எல்லாம் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட ஜாம் மற்றும் பொருட்கள்: 
இவர்கள் செய்யும் ரொட்டிகள் மிகவும் பிரபலமானவை.  fridge இல்லாததால், உணவு பதார்த்தங்கள் பதப்படுத்தப்படுகின்றன:


3.  கார் போன்ற எந்த வித நவீன பயண வசதிகளையும் பயன்படுத்தக் கூடாது.  குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகளில் அல்லது சைக்கிள் போன்ற வாகனங்களில்  தான் அவர்கள் இன்றும் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  (எங்கள் ஊர்ப் பக்கம் அடிக்கடி பார்த்து இருக்கிறோம்.  நான் இருக்கிறது ஒரு கிராமம் என்று தெரிந்து போச்சா!) 


4.  தொலைபேசிகள் மற்றும் அலைபேசிகள் பயன்படுத்தக் கூடாது.  சில ஆமீஷ் வியாபாரிகள் (குடும்பங்கள் அல்ல) , சில சமயம் தங்கள் வியாபாரத்துக்கு மட்டும் அலைபேசி சில சமயங்களில் பயன்படுத்துவது பழக்கத்துக்கு வந்துள்ளது.

5.  அஹிம்சை முறைகளைத்தான் பின் பற்ற வேண்டும்.  இதனால், இவர்கள் எந்தவித ராணுவ சேவைகள் செய்வது இல்லை. 

6.  அதை பின்பற்ற விருப்பமில்லாதவர்கள்,  ஆமீஷ் வாழ்க்கை முறையை விட்டு விட்டு, அந்த காலனியையும் விட்டு  விலகி சென்று விட வேண்டும்.  அங்கேயே இருந்து கொண்டு புரட்சி செய்கிறேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது.  மீறி,  குடும்பத்துடன் தங்க விளைந்தால்,  சபையே இவர்களை விலக்கி வைத்து விடும்.  (நம்ம ஊரு பக்கம், ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவது போல.....) 

அவங்களுடைய பார்கிங் லாட்:


7.  குழந்தைகளையும் அவர்களே தங்கள் காலனியில் நடத்தும் - ஒரு அறை கொண்ட பள்ளிக்கூடத்திலேயேதான் கல்வி கற்க அனுப்ப வேண்டும்.  அதுவும் அவர்கள் கல்வி முறை, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே.  அதன் பின், வாழ்க்கை கல்வி என்ற பெயரில்  அவர்கள் வாழ்க்கை முறைக்குத் தேவையான  விவாசய செய்முறை (usually organic living) - தச்சு வேலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்முறை எல்லாம் கற்றுத் தரப்படும். 


குழந்தைகளுக்கு கட்டாய கல்வி முறையை சட்டமாக கொண்டுள்ள அமெரிக்க அரசாங்கம்,  இவர்கள் குழந்தைகளை ,  அமெரிக்க கல்விகூடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவு போட்ட பொழுது, 1972 ஆம் ஆண்டு,  அமெரிக்க சுப்ரீம் நீதிமன்றம்,  இவர்களின் குழந்தைகளை கட்டாய கல்விக்கு வலியுறுத்துவது, Free Exercise Clause of the First Amendment விதிமுறையை மீறுவதாக அமைந்து விடும் என்று தீர்ப்பு கூறி விட்டது.   

The First Amendment (Amendment I) to the United States Constitution is part of the Bill of Rights. The amendment prohibits the making of any law "respecting an establishment of religion", impeding the free exercise of religion, infringing on the freedom of speech, infringing on the freedom of the press, interfering with the right to peaceably assemble or prohibiting the petitioning for a governmental redress of grievances.

8.  உலகப் பிரகாரமான கேளிக்கைகள் (சினிமா உட்பட) மற்றும் விளையாட்டுக்கள் எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.  இன்னும் பம்பரம் விடுதல்,  roller skating  போன்ற விளையாட்டுக்கள் தான் இங்கே பிரசித்தம்.  பொழுதுபோக்கு முறைக்காக,  இறைவனைத் துதித்து பாடும் பாடல்களை,  அவர்களே  கைகளால் செய்யப்பட இசைக்கருவிகள் கொண்டு இசைத்துப் பாடிக் கொள்வார்கள். அதற்கேற்ப, பவ்யமாக ஆடிக் கொள்வார்கள். 



எங்க ஊரு பக்கம் உள்ள ரோடு sign . காரில் வேகமாக வருபவர்கள்,  கவனமாக ஓட்ட வசதியாக: 


9.  இயேசு கிறிஸ்துவை  மட்டுமே வாழ்கையின் ஆதாரமாக கொண்ட நம்பிக்கை உடையவர்கள்.  அவர்களுக்கென்று உள்ள ஆலயம் செல்வதும், கூட்டு பிரார்த்தனைகள் செய்வதுமே முதன்மையானதாக கருதப்பட வேண்டும். 

10.  பணிவும் அடக்கமுமே ( humility) எப்பொழுதும் மனதில் இருக்க வேண்டும்.  தலைக்கனம், பெருமை,  ஈகோ, பகட்டு எதற்கும் இடம் கொடுக்க கூடாது. எல்லாவற்றிலும் எளிமை வேண்டும்.

இவர்கள் தாங்களாக புகைப்படங்கள் கூட எடுத்து வைத்துக் கொள்வதில்லை.  புகைப்படங்கள் எல்லாம்,  தம்மை அழகாக காட்டிக் கொள்ள தூண்டி விடும் தற்பெருமைக்குள் (personal vanity) தன்னை தள்ளிவிடக் கூடும் என்று கருதுகிறார்கள். இறைவன் படைப்பில், எல்லோரும் அழகானவர்கள் தான் என்று நம்புகிறார்கள். 


மற்றவர்கள் (ஆமீஷ் மக்கள் அல்லாதவர்கள்)  தங்கள் ஆல்பத்துக்காக,  இவர்களை புகைப்படம் எடுக்க , இவர்கள் சம்மதம் வாங்கி எடுத்துக் கொள்ளலாம்.

ஒருவருக்கொருவர் உதவியாக இருத்தல் - குழந்தைகள் வளர்ப்பில் மற்றும் அன்றாட தேவைகளுக்கு,  சமூகமாக ஒன்றுபடல் - இறைவன் ஆராதனை மட்டுமே தங்கள் வாழ்க்கை என்று இருக்கிறார்கள். 

மாட்டுக்குப் பதிலாக குதிரை அல்லது கழுதை வைத்து விவசாயம் நடைபெறுகிறது: 




தங்கள் வேலைகள் அனைத்தையும் தாங்களே செய்து கொள்ளும் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை கொண்டவர்கள்.   இன்னும் கடும் உடல் உழைப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால்,  பொதுவாக மற்றவர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் இவர்களுக்கு வருவதில்லை.  அப்படியே நோய்வாய்ப்பட்டாலும்,  கைமருத்துவம் தான் நம்பி இருக்கிறார்கள்.  அதையும் மீறி வரும் பொழுது,  இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொள்ளும் எண்ணம் கொண்டவர்கள்.  மிகவும் அபூர்வமாகத் தான் வெளிமருத்தவம் நாடி,  அவர்களுக்கென்று சபை சம்மதம் தெரிவித்து உள்ள குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு செல்வது உண்டு.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண முறை கொண்டவர்கள். விவாகரத்து என்பதே இவர்களில் கிடையாது.  
 அவர்களில் ஒருவரை  சந்தித்த பொழுது,  நவீன வசதிகளை எதற்காக புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டோம்.  அவர் சொன்ன பதிலில் இருந்து நான் இன்னும் மீளவில்லை: 

" நவீன வசதிகள் எல்லாம் - மின்சாரம் பயன்படுத்துவது உள்பட - மனிதர் ஒவ்வொருவரையும் தனித்தன்மையுடன் இயங்கச் செய்ய வைப்பதாகவே  உள்ளது.  (It encourages independent style of living.)  எங்கள் சமூகத்தை சார்ந்து வாழும்,  கூட்டு  வாழ்க்கை முறையை விட்டு விட்டு, தனி மனித - தனி குடும்ப வசதி முறைக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக மாற்றி விடக் கூடியதாக  உள்ளது.  அது மட்டும் அல்ல,  அந்த பொருட்கள் நம்மை அடிமையாக்கி, நம் குடும்பங்கள் - நம் சந்தோசம் - என்று நினைப்பதை விட்டு விட்டு, என் குடும்பம் - என் சந்தோசம் - என்ற குறுகிய வட்டத்துக்குள் நம்மை கொண்டு சென்று விடக் கூடும்.  எனது அடுத்த வீட்டாருடன், சகோதரத்துவ குணத்துடன் பழக வைக்க விடாமல், அவர்களையே என் போட்டியாளர்களாக கருத வகை செய்து விடும்.  அந்த பொருட்களை பயன்படுத்துவது,   நமது வசதிகளைப் பெருக்குவதாக முதலில் தோன்றினாலும்,  நமது பணத்தேவைகளையும்  அதை விட பலமடங்கு பெருக்கி,  எளிய வாழ்க்கை முறையில் கிடைக்கும் மகிழ்ச்சி - நிம்மதி கிடைக்க வழியில்லாமல் செய்து விடும், " என்றாரே பார்க்கலாம். 

இவர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள: 

 
நன்றி: பாளை-சித்ரா.(அமெரிக்கா)
 

சிலுவையில் இயேசுவை அடிக்கின்றனர் மதுரையில்...

அப்பாவி மக்களை அவதிக்குள்ளாக்கும்
அமெரிக்கன் கல்லூரி போராட்டம்:
சீ...! தூ.......இவர்கள் கிறிஸ்துவர்களா?

மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வகிப்பதில் இரு தரப்பினருக்கும் இரண்டு ஆண்டுகளாக பிரச்னை நிலவுகிறது. இரு தரப்பினரும் கோர்ட்டை அணுகுவதும், இதற்காக போராட்டம் என்ற பெயரில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதும் வாடிக்கையாகி விட்டது. தற்போது கல்லூரி நிர்வாகத்தை ஒரு தரப்பு பொறுப்பு ஏற்று அமைதியாக நடத்துவதாக கூறினாலும், மற்றொரு தரப்பு போராட்டம் என்ற பெயரில் கல்லூரி வளாகத்திற்குள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட வேண்டிய போலீசார், கல்லூரியில், இந்த நாடகங்களை வேடிக்கை பார்த்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று உண்ணாவிரதம், அதற்கு எதிராக அரசியல்கட்சிகள் பாணியில் நடத்தப்பட்ட உண்ணும் விரதம் போராட்டத்தில் பிரச்னை ஏற்பட்டு, ரோட்டுக்கு வந்தது. இதனால் பாதிக்கப்பட்டது அப்பாவி பொதுஜனம்தான்.

நகரின் பிரதான அழகர்கோயில் ரோட்டில் மறியல் மற்றும் மோதல் நடந்ததால், வாகனங்கள் நெரிசலில் சிக்கின. இதனால் சிம்மக்கல் பகுதியில் இருந்த சென்ற வாகனங்கள், மாட்டுத்தாவணி, அழகர்கோவில் செல்ல முடியாமல், யானைக்கல் வரை அணிவகுத்து நின்றன. மாட்டுத்தாவணி, புதூர் பகுதியில் இருந்து வந்த வாகனங்கள், அவுட் போஸ்ட் வரை அணிவகுத்து நின்றன. போதிய போலீசார் இல்லாததால், அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பனகல் ரோடு, காந்தி மியூசியம் ரோடு, தங்கராஜ் சாலை ரோடு, நரிமேடு ரோடு, செல்லூர் மெயின் ரோடு, கோகலே ரோடு என அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவசர காரியங்களுக்காக சென்றவர்கள், அலுவலகம் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். கோரிக்கைகளை வலியுறுத்தி போராட நினைப்பவர்கள்,முதல்வர் கருணாநிதி வீட்டிற்கு முன் சென்று 
போராட கேட்டுக் கொள்கின்றோம்.

Saturday, March 12, 2011

திருநெல்வேலி

திருநெல்வேலி:
சட்டசபைத்தேர்தலில் 43 தொகுதிகளில் தனித்துப்போட்டியிடவிருப்பதாக அழகுமுத்துக்கோன் பேரவை அறிவித்துள்ளது.அழகுமுத்துக்கோன் பேரவை நிறுவனர் சுடர்ஒளி முருகன் அறிக்கை:தமிழகத்தில் யாதவர் சமூகத்தை சேர்ந்த 82 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 43 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். யாதவ சமுதாயத்திற்கு எந்த கட்சியும் அங்கீகாரம் வழங்கவில்லை.தேர்தலில் வெற்றியை நிர்ண யிக்கும் சக்தியாக யாதவ மக்கள் உள்ளனர்.யாதவ சமுதாய மக்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு அழகுமுத்துக் கோன் பேரவை. இப்பேரவைக்கு 14 ஆயிரம் நிர்வாகிகள் உள்ளனர். 7 ஆயிரத்து 524 இளைஞர் மன்றங்கள், 318 விவசாய சங்கங்கள் உள்ளன. சட்டசபைத்தேர்தலில் 43 தொகுதிகளில் தனித்துப்போட்டியிட முடிவு செய்துள் ளோம்.அழகுமுத்துக்கோன் வரலாற்றை பள்ளிப்பாடத்தில் சேர்ப்பது, பால் வளத்துறை அமைச்சராக யாதவர் சமு தாயத்தினரை நியமிப்பது, மதுவிலக்கை அமல்படுத்துவது, புதிய தொழிற்சாலைகள் துவக்குவது, ரேஷன் கடை களில் பொருட்களை சரியான எடையில் வழங்குவது, பீடித்தொழிலாளர்களுக்கு மாற்றுத்தொழில் அளிப்பது குறித்து தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வோம். அனைத்து சமுதாய மக்கள் ஆதரவையும் திரட்டுவோம்.

Wednesday, March 9, 2011

தானியேலின் கல்லறை

தானியேலின் கல்லறை
 ஈரான் நாட்டில் உள்ள தானியேலின் கல்லறை.
பூமியின் தூளிலே நீ நித்திரை கொள் என்று தேவதூதன் தாநிஎளிடத்தில் சொன்னான்.கடைசி நாளில், உனக்குண்டான பலன் என்னோடு வரும்.
அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள்
ஆகைய மண்டலங்களில் நட்சத்திரங்களைப் போல் ஜொலிப்பார்கள்.
தானியேல் எப்படி ஆசிர்வதிக்கப் பட்டவன்!
இரவும்-பகலும் தேவனைத் தியானித்து வருபவர்களுக்கு இப்படியாகும்.

Tuesday, March 8, 2011

சிவகங்கை சிதம்பரம்- இனி அவுட்.!!!

இனி சிதம்பரம் தேர்தலில் வெற்றிபெறுவது இயலாத காரியம்தான்.



சென்றமுறை இராஜ கண்ணப்பனுடன்- ஜெயலலிதாவுடன் , இரகசிய உடன்படிக்கை செய்த சிதம்பரம், எப்படியாவது 
தி.மு.க.வை கழட்டிவிட வகைதேடி காய்களை நகர்த்தினார்.

கடைசியில், தி.மு.க.பெருசு 63  தொகுதிகள் கொடுப்பதாக ஒத்துக் கொண்டு 
சிதம்பரத்திற்கு பெரிய ஆப்பாக சொருகிவிட்டது.


இயலாத சிதம்பரம் இப்பொழுது அ.தி.மு.க.விற்கும் எதிரி- தி.மு.க.விற்கும் எதிரி.இனி, தேர்தல் கனவு  காணக் கூடாது...என்பது எழுதப் படாத விதி.

சிதம்பரம்-செய் நன்றி மறந்தார்.

Thursday, March 3, 2011

எதனை நீ அடைந்தாய்?

அம்மா-உனக்கொரு நல்லகாலம் பொறக்கும்.
பெண் வியர்வை சிந்தினாலும்.....
கண்ணீர் சிந்தினாலும்
அதற்குப் பதில்  சொல்லி ஆக வேண்டும்.
 

Wednesday, March 2, 2011

பாவம் ஜெகத் இரட்சகன்.


                                                            படம்- உதவி-தினமலர்
நேரம் தவறாது காரியம் செய்து முடிப்பவர் கருணாநிதி. அவரைப் பார்த்து நான் நேரம் தவறாமையை கடைபிடிக்கிறேன். நான் எந்த காரியத்தை துவக்கினாலும், என் உள்ளம் அவரைத் தான் நினைக்கும். நான் துவக்கிய, "டிவி', பத்திரிகை, கல்வி அறக்கட்டளை, பண்ணிசை மன்றம் என அனைத்திற்கும் அவரைத் தான் அழைத்தேன். அவர் தான் துவக்கி வைத்தார். எங்கள் நட்பும் பாசமும் என்றும் இருக்கும். 31 தொகுதிகளை அள்ளி வந்ததில் பாட்டாளிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆறாவது முறையாக கருணாநிதியை முதல்வராக்க அனைவரும் துடிக்கிறார்கள்.

சென்றமுறை ஜெகத் இரட்சகன் பாட்டாளி மக்கள் கட்சியை உடைத்து
தி.மு.க.வில் கூட்டணி வைத்தார்.இந்தமுறை அவருடைய நிலை என்ன!?

இவரது மனைவி நிர்வாகத் திறன் மிக்க மள்ளர்குல மாணிக்கம்.

Tuesday, March 1, 2011

WOW! காந்தியா --- ஆர்.எஸ்,எஸ்.எஸா ?



என்ன கவிதை-
உணர்சிக் கவிஞர் கூட்டம்.
நியாயமான கேள்விகள்.
ஆனால் ஒரு சந்தேகம்........
அரிஜன் என்று பெயர் வைத்தது  காந்தியா --- ஆர்.எஸ்,எஸ்.எஸா ? 


மேலே காணும் லிங்க் க்ளிக் செய்யுங்கள்.

ஐ லவ் யூ

http://www.youtube.com/watch?v=tF-TFIqYiJw&feature=relmfu

".........குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டு பண்ணினீர் "

சங்கீதம் 8 :2

ஐ லவ் யூ என்று தைரியமாகச் சொல்லும் இடம் தெரிந்துவிட்டது.

இந்த லிங்க் க்ளிக் செய்து பாடலைக் கேளுங்கள்.

தினமலர் படத்திற்கு நன்றி

கடவுள் சொல்லிக்கொடுத்த தியானம்

கடவுள் சொல்லிக்கொடுத்த தியானம்


மேலேயுள்ள இணைப்பில் சொடுக்குங்கள்.

சின்னக் குழந்தை சொல்லிக் கொடுக்கும் ஜெபம்.



ஏலமாட்டாதவனுக்கு எழுபது பொண்டாட்டியாம் ....

கொழும்பு:இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட கேபிர் ரக விமானங்கள், இலங்கை விமானப்படையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. விமானப்படையின், 60ம் ஆண்டு விழாவையொட்டி, கொழும்பில் இன்று விமான சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த சாகச நிகழ்ச்சிக்காக, கேபிர் ரக விமானங்கள், நடுவானில் சீறி பாய்ந்து பயிற்சி செய்து கொண்டிருந்தன. திடீரென, இரண்டு விமானங்கள் மோதி தீ பிடித்து கீழே விழுந்தன. இவ்விபத்தில், விமானிகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. காம்பகா மாவட்டத்தின் வாரனா என்ற இடத்தில், ஒரு விமானத்தின் எரிந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. மற்றொரு விமானத்தின் சிதைந்த பாகங்கள், சில கி. மீ., தள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது